Friday, October 12, 2012

கிருமி நாசினி எலுமிச்சைப் புல் - CYMBOPOGAN FLEXOSUS



கிருமி நாசினி எலுமிச்சைப் புல் -
CYMBOPOGAN FLEXOSUS
பொதுவான குணம் எலுமிச்சப்புல் இந்தியா, பர்மா, ஸ்ரீலங்கா மற்றும் தாய்லேண்டைத் தாயகமாகக் கொண்டது. இது எல்லா வகை மண் வகைகளிலும், சத்துக் குறைவான மண்களிலும், களர் மற்றும் உவர் மண்களிலும் பயிரடலாம். இதிலிருந்து வரும் சிட்ரால்வாசனை எண்ணெய எலுமிச்சம் பழத்தின் வாசனை கொண்டதால் இப்பயர் பெற்றது. காடுகளிலும் மலைகளிலும் தானே வளர்ந்திருக்கும் . இப்புல் 1.2 - 3.0 மீ. உயரம் வரை வளரும். இது ஒரு நீண்ட காலப் பயிர். கேரளாவில் இது அதிக அளவு பயிரிடப் படுகிறது. வெளி நாடுகளுக்கு 90 -100 மெட்ரிக் டன் வரை ஏற்றுமதியாகிறது. இதனால் இந்தியாவுக்கு சுமார் 5 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியாகக் கிடைக்கிறது. இதை வணிக ரீதியாகப் பயிரிட நிலத்தை நன்றாக உழுது சமன் செய்து பாத்திகள் அமைக்க வேண்டும். அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 5-7 டன் தொழு உரம் இடவேண்டும். 125 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 32 கிலோ பொட்டாஸ் இட்டு நீர் பாச்சவேண்டும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் விதைகள் மற்றும் தூர்கள் மூலம் ஒரு ஏக்கருக்கு 18000-18500 தூர்கள் வரிசைக்கு வரிசை 2 அடியும், செடிக்குச் செடி1.5 அடியும் இடைவெளிவிட்டு நடவேண்டும். நடவு செய்த ஒரு மாதத்தில் 30 கிலோ தழைச்சத்து தரவல்ல உரத்தை இட வேண்டும். மற்றும் 3 மாதங்களில் 40 கிலோ தழைச்சத்து தரவல்ல உரத்தினை இட வேண்டும். துத்தநாக குறையுள்ள மண் எனில் 25-50 கிலோ துத்தநாக சல்பேட்டினை இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். பின் 10 நாட்களிக்கு ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதும். களைகள் வந்தால் 10-15 நாட்களுக்கொரு முறை எடுத்தால் போதும்.
நட்ட 4 - 5 மாதங்களில் பயிர் அறுவடைக்குத் தயாராகி விடும் 3-4 மாதங்கள் என்ற இடைவெளியில் 4 ஆண்டுகள் வரை அறுவடை செய்யலாம். இந்தப் புல் குளிர் காலங்களில் பூக்க வல்லது. அறுவடை செய்த பின் புல்லை நன்றாக நிழலில் காயவைத்துக் கட்டுகளாக்க் கட்டி, காற்றுப் புகாத அறைகளில் சேமிக்க வேண்டும். ஹெக்டருக்கு 35-45 டன் புல் மகசூல் கிடைக்கும். புல்லிலிருந்து 0.2 - 0.3 சதவிகிதம் எண்ணெய என்ற அளவில் ஹெக்டருக்கு 100 - 120 கிலோ எண்ணெய் கிடைக்கும். ஹெக்டருக்கு ரூ.30,000 - 50,000 வரை நிகர வருமானம் கிடைக்கும்.
வேறுபெயர்கள் வாசனைப்புல், மாந்தப்புல், காமாட்ச்சிப்புல், கொச்சி வாசனை எண்ணெய்
ஆங்கிலப் பெயர் CYMBOPOGAN FLEXOSUS.  தாவரக்குடும்பம் : POACEAE / GRAMINAE.
மருத்துவக் குணங்கள்
இந்தப்புல்லிலிருந்தும், தண்டுகளிலிருந்தும் எடுக்கப்படும் எண்ணெயில் டெர்பினைன் 0.50 சதம், பீட்டா டெர்பினியால் 0.40 சதம், அல்பா டெர்பினியால் 2.25 சதம், ட்ரைபினையல் அசிடேட் 0.90 சதம், போர்னியால் 1.90 சதம், ஜெரானியால் மற்றும் நெரால் 1.5 சதம், சிட்ரால் பி 27.7 சதம், சிடரால்-ஏ 46.6 சதம், பார்னிசோல் 12.8 சதம், பார்னிசால் 3.00 சதம் என்று பல வேதிப் பொருட்கள் உள்ளன. எண்ணயெ மூலம் சோப்புகள், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பு, சிட்ரால் வைட்டமின் போன்ற வேதிப் ரொருட்கள் எடுக்கப் பயன்படுகின்றன. கிருமி நாசினியாக பயன்படுகிறது. பூச்சிக்கொல்லியாகவும் பயன் படுகிறது. எண்ணெய் எடுத்த பின் எஞ்சிய புல் மாட்டுத் தீவனமாகவும், காகிதங்கள், அட்டைப் பட்டிகள் தயாரிக்கவும், எரிபொருளாகவும் பயன் படுகிறது. இந்தப் புல்லிருந்து சூப் செய்கிறார்கள், இறைச்சி, மீன் வகைகளில் உபயோகிக்கிரார்கள். இதில் போடப்படும் டீயும் நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment