Friday, October 12, 2012

சொறி, சிரங்குகுணமாக எழுத்தாணிப் பூண்டு - PRENANTHES SARMENTOSUS



சொறிசிரங்குகுணமாக ழுத்தாணிப் பூண்டு -
PRENANTHES SARMENTOSUS

பொதுவான குணம் எழுத்தாணிப் பூண்டு ஒரு குறுஞ்செடி. பற்களுள்ள, முட்டை வடிவ, காம்புள்ள இலைகளையும், உருண்ட தண்டுகளில் (எழுத்தாணி போன்ற) நீல நிறப் பூக்களையும் உடைய நேராக வளரும் செடி.. எல்லா வழமான இடங்களிலும் வளரும். நஞ்சை நிலங்களில் வரப்புகளில் தானே வளர்வது. இதற்கு முத்தெருக்கன் செவி என்ற பெயரும உண்டு. மல மிளக்கும் குணமுடையது. விதைகள் மூலம் இனப்பெருக்கும் செய்கிறது. தமிழ் நாட்டில் எங்கும் காணப்படும்.
வேறுபெயர்கள். முத்தெருக்கன் செவி
ஆங்கிலப் பெயர் PRENANTHES SARMENTOSUS.  தாவரக்குடும்பம் -: COMPOSITAE
மருத்துவக் குணங்கள்
எழுத்தாணிப்பூண்டின் இலைகள்
5-10 கிராம் எடுத்து நன்கு அரைத்துச் சற்று தாராளமாக
மலம் போகும் அளவாகக் காலை, மாலை கொடுத்துவரக் குடல் வெப்பு நீங்கிப் புண் ஆறும். சீதபேதி குணமாகும்.
இதன் இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணைய் கலந்து பதமுறக் காய்ச்சி உடம்பில் தடவி வரச் சொறி, சிரங்கு முதலியவை குணமாகும்.
இதன் 5 கிராம் வேரை பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை, மாலை உண்டு வர மார்பகம் வளர்ச்சியுறும். கரப்பான், பருவு, பிளவை ஆகியவை தீரும்.
பழமலங்கள் சாறும் பருங்குடற்சீ தம்போ
மெழுமலச்சீ கக்கடுப்பு மெகு-மொழியாக்
கரப்பான் சொறிசிரங்குங் காணா தகலு
முரப்பா மெழுத்தாணிக் கோது.

பொருள் -: எழுத்தாணிப் பூண்டுக்கு பழ மலக்கட்டு, குடலின் சீதளம், கிரகணி, கரப்பான், புடை, சிரந்தி போகும்

Launaea sarmentosa -
ழுத்தாணிப் பூண்டு
சூரியகாந்தி குடும்பத்தைச்சேர்ந்த இது இலங்கையின் கிழக்கு கரையோரங்களில் கடற்கரையை அண்டி படர்கின்ற ஒரு படரி, இணைக்கவர் முறையில் முனைகளை விட்டு படரும். முனை முடிச்சுக்கள் நிலத்தில் வேரூன்றி ,நிலத்தின் கீழாக கிடையாக நீண்ட மெல்லிய உருளை வடிவமான வேர்களை விட்டு வளரும்.இந்த தாவரத்தின் பூக்கள் பிரகாசமான மஞ்சள் நிறமானவை

2 comments: