Thursday, September 27, 2012

இருமல் குணமாக கற்பூரவள்ளி!

இருமல் குணமாகற்பூரவள்ளி!

இதன் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். இதன் இலைகளை ஒடித்தாலோ அல்லது கிள்ளி எடுத்தாலோ நல்ல தைல வாசனை வரும். இது 2 அடிவரை வளரக்கூடியது. வேர்கள் அதிக ஆழம் செல்லாமல் கொத்து வேராக இருக்கும். இலையே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் தானாகவே வளர்கின்றது.
வேறுபெயர்கள்: ஓம்வள்ளி
மருத்துவ குணங்கள் : கற்பூரவள்ளி இலையை அடையாகச் செய்து சாப்பிட்டு வர செரிமாணக் கோளாறுகள் நீங்கும்.
கற்பூரவள்ளி இலையை மென்று தின்று வர மூச்சுத் திணறல் போகும். (நாக்கில் கொஞ்சம் சுறுசுறுப்பு ஏற்பட்டு லேசான வெளிர் காரம் இருக்கும். இதனால் எந்தத் தீமையும் இல்லை.)
கற்பூரவள்ளி இலை, முசுமுசுக்கை, தூதுவளை வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து நல்லெண்ணெய் அல்லது பசும் நெய்விட்டு வதக்கி பின்னர் அரைத்து வைத்துக்கொண்டு அமுக்கிரா, சுக்கு, மிளகு, சேர்த்து சமஅளவாக எடுத்துப் பொடிச்செய்து, ஒரு கடாயில் மாவுப் பொடிக்குத் தகுந்தவாறு நெய் ஊற்றிக் காய்ச்ச வேண்டும். நெய் காய்ந்தவுடன் அதில் பொடியை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு கிளறிக் கொண்டே வரும்போது விழுதையும் சேர்த்து அத்துடன் சிறிது பனங்கற்கண்டையும் கலந்து கிளறிக்கொண்டு இறக்கி வைத்து நெல்லிக்காய் அளவு 2 வேளை சாப்பிட்டுவர இழுப்பு சளி, இருமல் குணமாகும்.
கற்பூரவள்ளி இலையைப் பறித்து சாறு பிழிந்து சங்களவு எடுத்து அத்துடன் கோரோசனை சிறிது இழைத்துப்போட குழந்தைகளுக்குக் காணும் மாந்தம் செரியாமை, காய்ச்சல் குணமாகும்.
கற்பூரவள்ளியிலைச் சாறு 100 மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டை பொடி செய்து கலந்து குடித்து வர தொண்டைக் கமறல் நீங்கும்

1 comment: