Friday, June 14, 2024

வன்னிய குல க்ஷத்ரியா்

வன்னிய குல க்ஷத்ரியா் தினம் இன்று.

 🛕🌳🔥🔥🔥🔥🔥🌳🛕

  ஜீன் 13 − "வன்னிய குல க்ஷத்ரியா் தினம்" .

 G.O.No.271, 13th June 1929 என்கின்ற அரசாணை வழங்கும்போது தமிழ்நாடும், ஆந்திர மாநிலமும் ஒருங்கிணைந்த மெட்ராஸ் அரசாக (Government of Madras) இருந்தது. மேற்படி அரசாணை வருவதற்க்கு முன்பு வரை சென்னை மாகானத்தின் ஒரு மாவட்டமான தமிழ்நாட்டில் வன்னிய குல க்ஷத்ரியர்கள் பள்ளி மற்றும் வன்னியர் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்கள்.

சென்னை மாகானத்தின் ஒரு மாவட்டமாக இருந்த ஆந்திராவில் அக்னி குல க்ஷத்ரியர்கள் பள்ளி மற்றும் வன்னியர் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்கள்.

தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் வன்னியர் மட்டுமே "வன்னிய குல க்ஷத்ரியர்" எனவும், ஆந்திராவில் வாழ்ந்துவரும் வன்னியர் "அக்னி குல க்ஷத்ரியர்" எனவும் அரசு ஆணை எண் 271 நாள் 13.6.1929ல் மதராஸ் அரசு வெளியிட்டது.

தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் வன்னியரே க்ஷத்ரியர் எனவும், தென்னிந்திய இராஜபுத்திரர்கள் எனவும், தமிழ்நாட்டு க்ஷத்ரியர் எனவும், தமிழ்நாட்டு இராஜபுத்திரா்கள் எனவும் அழைக்கப்படும் வரலாற்று பெருமை உடைய ஒரே இனம் நம் வன்னியகுல க்ஷத்ரிய இனமாகும்.

 

தமிழ்நாட்டில்

"வன்னிய குல க்ஷத்ரியர்"

 ஆந்திராவில்

"அக்னி குல க்ஷத்ரியர்"

கேரளாவில்

சம்பு குல க்ஷத்ரியர்

கர்நாடகாவில்

திகளர் குல க்ஷத்ரியர்

என தென்னிந்தியா முழுவதும், பெருவாரியான மக்கள் தொகையுடன் வாழ்ந்து வரும் ஒரே இனம் அக்னியில் தோன்றிய நம் இனமாகும்.

கி.பி. 08.04.1888ல் இந்தியாவிலேயே முதல் முதலாக "வன்னிய குல க்ஷத்ரிய மஹா சங்கம்" மதராஸ் பிரசிடென்சியில், வன்னிய குல க்ஷத்ரிய மஹா சங்கத்தின் தந்தை "வன்னி குலோத்தாரணர்" மகான் ஸ்ரீ கா.கோபால் நாயக்கர் அவர்களால் துவக்கப்பட்டது.

வன்னியர்கள் (பள்ளி) என்ற பெயரை "வன்னிய குல ஷத்ரியர்" எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடுத்தனர்.

வன்னியர்கள் "க்ஷத்ரியர் "என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி வெற்றியும் பெற்றார்கள்.

பின்பு நாங்களும் க்ஷத்ரியர்தான் என்று சில ஜாதிச் சங்க தலைவர்கள் நீதிமன்றத்தில் உரிமை கொண்டாடினர். போதிய ஆதாரம் இல்லாததால் இவர்களின் வழக்கை தள்ளுபடி செய்தது பிரிட்டிஷ் அரசு.

தென் இந்தியாவில் வன்னியர் மட்டுமே "க்ஷத்ரியர்" என அரசாணை எண் 271/1929 கெசட்டிலும் வெளியிட்டனர்.

வன்னிய குல க்ஷத்ரியர்  என்ற நம் சாதி பெயரை பெறுவதற்கே 60 ஆண்டுகள் போராட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டதை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்.

நம் சமுதாயத்திற்கு "க்ஷத்ரியர்" என்ற பட்டம் சாதரணமாக கிடைத்து விட வில்லை.

கிட்ட தட்ட பல ஆயிரம் காலமாக ஆண்ட பரம்பரையில் கல்வி, பொருளாதாரம், ஆட்சியில் உயர்ந்த நிலையில் இருந்து வந்த நாம் இடைப்பட்ட கால அந்நிய படையெடுப்புகளினாலும், நம் எதிரிகளின் சூழ்ச்சிகளினாலும் ஆட்சி அதிகாரத்தை இழந்தோம்,

நம் வரலாற்றையும், கல்வியையும் தொலைத்து 600 ஆண்டுகள் ஆகி அனைத்திலும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டோம்.

வன்னி நாடு பல மரபார் ஆட்சிக்கு உட்பட்டு கடைசியாக வந்த ஆங்கிலேயன் நம்மை கீழ் ஜாதி வரிசையில் 8 வது இடத்தில் " பள்ளி " என்று நம்மை இணைக்க பார்த்த போது நம் குல முன்னோர்கள் கொதித்து எழுந்தனர்.

நம் சமுதாய மக்கள் எங்களை "வன்னிய குல க்ஷத்ரியர் "என்றே குறிக்க வேண்டும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரியிடம் முறையிட்டு நாடு முழுதும் போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் வெடிக்க செய்தனர்.

1872 ஆம் ஆண்டு குன்னம் முனுசாமி பிள்ளை அவர்களது "ஜாதி சங்கிரச்சாரம்" என்ற நூலில் வன்னியர்களை பற்றி விரிவாக சான்றுகளுடன் விளக்கப்பட்டு இருந்தன.

காஞ்சிபுரம் ஆறுமுக நாயகர் 1907 இல் " சாதி கண்ணாடி " என்று பொருள் படும் " வருண தருப்பணம் " எனும் நூலை வெளியிட்டார்.

குன்னம் முனுசாமி பிள்ளை அவர்கள் வன்னிய குல க்ஷத்ரிய மகா சங்கத்தின் ஆய்வாளராக செயல்பட்டார்.

மஹா சங்க பிரதேச காரியதரிசியாக இருந்த அய்யா கா. அண்ணாசாமி நாயகர் அவர்களைக் கொண்டு " வன்னிய குல விளக்கம் " என்ற அறியதோர் ஆராய்ச்சி நூலை எழுதி அய்யா கா.கோபால் நாயக்கர் அவர்கள் சொந்த செலவில் அச்சிட்டு வெளியிட்டார்.

 

அக்காலத்தில் மஹா சங்க உள்ளூர் காரியதரிசியாயிருந்தவரும் அரசாங்க கல்விச்சாலை மேற்பார்வையாளருமான அய்யா அய்யாகண்ணு நாயக்கர் B.A. அவர்களைக் கொண்டு தமிழில் அச்சிட்டு வெளியிட்ட வன்னி குல விளக்கத்தை ஆங்கிலத்தில் எழுதும்படி செய்து அதையும் தன் சொந்த செலவில் அச்சிட்டு எல்லா கலெக்டர்களுக்கும், அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கும் அனுப்பி நமது மரபை வன்னிய குல க்ஷத்ரியர் என்பதை அய்யா கா.கோபால் நாயக்கர் நிலைநாட்டி சென்றார்.

அந்த ஆங்கில புத்தகத்தை கோதாவரி ஜில்லா கோரிங்கா அக்னி குல க்ஷத்ரிய சங்க தலைவர் அய்யா திருவாளர். இலட்சுமணசாமி வர்மா அவர்கள் தெலுங்கில் மொழிபெயர்த்து அவர் சொந்த செலவில் அச்சிட்டு வடநாட்டில் பரவச்செய்தார்.

பல்வேறு இலக்கியங்களில் வன்னியர்களை பற்றிய குறிப்புகளும், கல்வெட்டு செய்திகளையும், வட மொழி சூத்திரங்களையும், தாமிர செப்பேடு செய்திகளையும், ஓலைச் சுவடிகளையும், சிலசாசனங்களையும், பல மாநிலங்களுக்கும், ஊர்களுக்கும் சென்று அலைந்து திரிந்து சேகரித்து மேற்கண்ட புத்தகமாக அச்சிட்டு இருந்தார்கள்.

சென்னை மாநில கல்லூரி சம்ஸ்கிருத பேராசிரியர்களை கொண்டு அவைகள் உண்மையானவையா? என்று சான்றுகள் பெற்று இணைத்து இருந்தனர்.

மேற்கண்ட பல நூல்கள் வடிவில் சமர்பிக்கபட்ட சான்றுகளை சரி பார்த்த ஆங்கில அரசு இறுதியில் நமக்கு " வன்னிய குல க்ஷத்ரியர் " என்று ஜாதி பெயரை பயன்படுத்தலாம் என்று மேற்படி அரசாணை மூலம் அறிவித்தது.

வன்னியர் அல்லது பள்ளி என்போர் எல்லா ஆவணங்களிலும் வன்னிய குல க்ஷத்ரியர் " என்று குறிப்பிடலாம் என்று ஆங்கில அரசு அரசானை வெளியிட்டது.

தெலுங்கு பேசும் வன்னியர் அன்று சீமந்திரா பகுதி தமிழகத்துடன் இணைந்து இருந்த பகுதி அங்கு நம் மக்கள் அதிக அளவில் வசிகின்றனர்,

அவர்கள் தங்களை அக்னி குல க்ஷத்ரியர் என்கின்றனர்.

மேலும் கோலார், பெங்களுர், மைசூர், பகுதிகளில் வாழும் வன்னியர்கள் தங்களை "திகளர் " மற்றும் "சம்பு குல க்ஷத்ரியர்கள்" என்கின்றனர்.

அரசாணை வெளியீடு 1929 ஆம் ஆண்டு ஜூன்13 சென்னை மாகான சட்டதுறை மூலம் அரசாணை எண் 271ல்,

 தமிழ்நாட்டில்

" வன்னிய குல க்ஷத்ரியர் "     என்றும்,

 தெலுங்கு பேசும் ஆந்திரா பகுதியில்,

" அக்னி குல க்ஷத்ரியர் "

என்றும் குறிபிடபடுவர் என்று அரசு அறிவித்தது.

வன்னியர், பள்ளி என்று இருந்த நம் ஜாதிப் பெயரை சுமார் 60 ஆண்டுகள் போராடி "வன்னியகுல க்ஷத்ரியர் " மற்றும் அக்னி குல க்ஷத்ரியர் என்று பெயர்களை பெற்று தந்தனர் நம் குல முன்னோர்கள்.

அன்று முதல் ஜாதிச் சான்றிதழ்களிலும், பத்திரங்களிலெல்லாம் நமது ஜாதிப்பெயரை வன்னிய குல க்ஷத்ரியர் என்று எழுத தொடங்கினார்கள்.

சரித்திர பெருமை மிக்க தென்னிந்திய ராஜபுத்திரர்களாகிய நமக்கு " வன்னிய குல க்ஷத்ரியர் " என அரசானை கிடைக்க பெரும் பாடுபட்ட நம் குல முன்னோர்கள் கீழ்வருமாறு.

1. வன்னிய குல க்ஷத்ரிய மஹா சங்கத்தின் தந்தை "வன்னி குலோத்தாரணர்" அய்யா ஶ்ரீமான் கா.கோபால் நாயக்கர் அவர்கள்.

2. அக்னி குல க்ஷத்ரிய மஹா சங்கத்தின் தந்தை அய்யா P.லட்சுமண சுவாமி வர்மா அவர்கள்.

3. "வன்னிகுலோபகாரி" அய்யா புண்ணமை மு.தியாகராயர் நாயக்கர் அவர்கள்.

4. "ராவ் சாயப்" அய்யா .செல்லப்ப நாயக்கர் அவர்கள்.

5. ராவ் பஹதூர் அய்யா ஆற்காடு .தனகோட்டி முதலியார்.

6. மகாநாடு அய்யா அரங்கநாத நாயக்கர் அவர்கள்.

7. மகாநாடு அய்யா .சிங்காரவேலு நாயக்கர் அவர்கள்.

8. "மஹா சங்க கேப்டன்"அய்யா தூசி.இராஜகோபால் பூபதி நாயக்கர் அவர்கள்.

9. "வன்னி குல போஷகர்" அய்யா இரங்கூன் வெங்கடசாமி நாயக்கர் அவர்கள்.

10. அய்யா தி.அய்யாகண்ணு நாயக்கர் அவர்கள்.

11. அய்யா குன்னம் முனுசாமி பிள்ளை அவர்கள்.

12. " வன்னிய குல அறிஞர் " அய்யா கா.அண்ணாசாமி நாயக்கர் அவர்கள்.

13. " வன்னிய ரிஷி " அய்யா கா.ஆறுமுகம் நாயக்கர் அவர்கள்.

14. அக்னி குல க்ஷத்ரிய சங்கத்தின் பொது செயளாலர் அய்யா பிரம்மானந்த ராவ் வர்மா அவர்கள்.

15. அக்னி குல க்ஷத்ரிய சங்கத்தின் பொருளாளர் அய்யா பல்லவ கேசரி சத்திய ராஜீ அவர்கள்.

16. பாயக்காரிகளின் பாதுகாவலர் அய்யா அத்திபாக்கம் .வெங்கடாசலம் நாயக்கர் அவர்கள்.

17. வன்னிய குல க்ஷத்ரிய சமுதாய தந்தை "தேசிய கவிச்சிங்கம்" "இராஜரிஷி" அய்யா சு.அர்த்தநாரீச வர்மா நாயக்கர் அவர்கள்.

18. பல்லவ குலசேகரா் அய்யா கா.கோ.பலபத்திரா் நாயக்கர் அவர்கள்.

வன்னியர், பள்ளி என்றிருந்த நம் ஜாதிப்பெயரை வன்னிய குல க்ஷத்ரியர் என நமக்கு பெற்றுதந்த நம் முன்னோர்களை இன்று நாம் போற்றி வணங்குவதோடு, நம் முன்னோர்கள் போல நாமும் நம் குல மக்களுக்கு குலப்பணியும், நன்மையும் செய்வோம், தர்மமும் செய்வோமாக.

அவர்களைப் போல் நாமும் வாழ்ந்து காட்டுவோம்.

ஓம் நமசிவாய நமஹ

🛕🛕🌳🌳🔥🙏🏻🔥🌳🌳🛕🛕

 அன்புடன்

 மஹாரிஷி ஜம்பு ஆன்மீக மஹா சபா.

 தொண்டை மண்டலம்.