Thursday, September 27, 2012

காமாலை குணமாக ஆமணக்கு!

காமாலை குணமாக ஆமணக்கு!


ஆமணக்கு இலையைச் சுத்தம் செய்து நிழலில் உலர்த்திக் காய வைத்துக் கொளுத்தி, சாம்பலை எடுத்து சுத்தமான தண்ணீரில் கலக்க வேண்டும். கலக்கிய நீரை மட்டும் வடிகட்ட வேண்டும். வடிகட்டிய தண்ணீரைக் காய்ச்சினால் இதில் உப்பு கிடைக்கும். இந்த உப்பை கண்ணாடிப் புட்டியில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த உப்பை ஒரு தேக்கரண்டியளவு எடுத்து நொய்க் கஞ்சியில் கலந்து சிறிது பெருங்காயத்தையும் சேர்த்துக் குடித்து வர உடம்பு இளைத்து மெலிய ஆரம்பிக்கும். அல்லது இதே உப்பு, பார்லி, நெல்லி முள் சூரணம் வகைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர உடல் பருமன் குறைந்து வரும்.
தாய்மார்கள் ஆமணக்கு இலையில் நெய் தடவி அனலில் வாட்டி மார்புக் காம்பில் வைத்துக் கட்டி வரத் தாய்ப்பால் அதிகரிக்கும்.
ஆமணக்கு இலையைச் சின்னதாக அரிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்து கட்டி வர மூலக் கடுப்பு, கீல் வாதம், வாத வீக்கம் குணமாகும்.
ஆமணக்குத் துளிரை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கித் தொப்புளில் வைத்து கட்ட, தீராத வயிற்று வலி குணமாகும்.
ஆமணக்கு இலையுடன் கீழாநெல்லி இலையைச் சேர்த்து அரைத்து 30 கிராம் காலையில் மட்டும் 3 நாள் சாப்பிட்டு நான்காம் நாள் பேதிக்குச் சாப்பிட காமாலை குணமாகும்.
ஆமணக்கின் வேரை லேசாக நசுக்கி சிறிது தேனுடன் பிசைந்து கொஞ்சம் நீரில் 12 மணி நேரம் ஊற வைத்து மறுநாள் காலையில் இதைப் பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு நீரை மட்டும் 100 மில்லியளவு தினமும் காலையில் குடித்துவர வயிற்றின் பளுவும், உடல் பருமனும் வீக்கமும் குறையும்.
விளக்கெண்ணெய் 30 மில்லியளவு எடுத்து ஒரு டம்ளர் பசும்பாலிலோ அல்லது இஞ்சிச்சாறு கலந்தோ குடிக்க நான்கைந்து முறை பேதியாகும். பசியின்மை, வயிற்று வலி குணமாகும்.
விளக்கெண்ணெய் 1/2 தேக்கரண்டியளவு குழந்தைகளுக்கு உள்ளுக்குக் கொடுத்தால் மலம் கட்டியுள்ளது இளக்கமாகி குடலை விட்டு வெளியேறும்.
குழந்தைகளுக்கு ஆமணக்கு எண்ணெய்யுடன் பேயன் வாழைப்பழத்தைத் துண்டு துண்டாக அரிந்து ஊறப் போட்டு கற்கண்டைப் பொடி செய்து கலந்து தினமும் காலையில் 2 துண்டு வாழைப்பழமும் சிறிது எண்ணெய்யும் கொடுத்து வர சகல சூடும் தணிந்து ஆரோக்கியமாக வளரும்.

No comments:

Post a Comment